Wednesday, October 29, 2008


தீயவன்-

கருத்தம்மா ராஜஸ்ரீ யின் தங்கை மிதுனா ஹீரோயினாக நடித்த படம். உதய், ரஞ்சன் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் உதயும், மிதுனாவும் காதலிக்கிறார்கள். அவளை ஒருதலையாக விரும்பும் ரஞ்சன், ஆவிகளோடு பேசுகிற ஆற்றல் தெரிந்தவன். மிதுனா மீது ஒரு ஆவியை செலுத்தி வஞ்சகமாக அவரை ஊட்டிக்கு கொண்டு செல்கிறான். அங்கே தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயலும்போது மிதுனாவுக்குள் இருக்கும் ஆவி, அதற்கு உடன்படாமல் ரஞ்சனை கொன்று விடுவதுதான் க்ளைமாக்ஸ். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?) பி.கதிர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

No comments: